திமுக அரசை கண்டித்து அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கல்லக்குடி மற்றும் புள்ளம்பாடியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் .
அதிமுக பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க..
தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லக்குடி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகிலும், புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியிலும் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், தலைமையேற்று நடத்தினார்.
கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் S.வளர்மதி கண்டன உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் T.ராஜாராம், சூப்பர் T.N.T. சூப்பர் நடேசன், T.N.சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் V.பிச்சைபிள்ளை, ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், நகர கழக செயலாளர் பொன்னி சேகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர் I.விஜயா, P.சாந்தி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், புள்ளம்பாடி ஒன்றிய கழக துணை செயலாளர் கோவிந்தசாமி, மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.