மோடியை 3வது முறையாக பிரதமர் ஆக்குவதே லட்சியம். தலைமை வாய்ப்பாளித்தால் திருச்சியில் போட்டியிடுவேன் .ஆர்.ஜி. ஆனந்த்.
திருச்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர்.ஜி ஆனந்த் பேட்டி.
திருச்சி,
கருமண்டபம்,
மீனாட்சி திருமண மண்டபத்தில்
மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுடன் வினாடி வினா போட்டி நடைபெற்றது.
பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆர்.ஜி.ஆனந்த், ஒண்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாரதப் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?
12 வாரங்களாக இருந்த பெண்கள் மகப்பேறு விடுப்பு எத்தனை நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது?
என்பன உள்ளிட்ட அறிவார்ந்த 18 கேள்விகள் கேட்கப்பட்டது.
அங்கிருந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு ஆர்வமுடன் பதில் அளித்தனர்.
வெற்றி பெற்ற மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு டாக்டர்
ஆர்.ஜி.ஆனந்த் பேட்டி அளிக்க போது கூறியதாவது:-
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது என்பதனை இந்த வினாடி வினா நிகழ்ச்சி உணர்த்தியுள்ளது. இதில் பங்கேற்ற பெண்கள்
ஏறத்தாழ அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததே இதற்குச் சான்றாக உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று மூன்றாம் முறையாக மீண்டும்
மோடியை பிரதமர் ஆக்குவதே எங்களது லட்சியம்.
தலைமை வாய்ப்பளித்தால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திருச்சியில் போட்டியிடுவேன் .
இவ்வாறு என டாக்டர் ஆர் ஜி ஆனந்த் கூறினார்.