Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு .

0

 

திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற மாநில கராத்தே போட்டி நடைபெற்றது .

திருச்சியில் மாநில அளவிலான ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப்போட்டி திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர். சஸ்வர்குமார் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட தலைவர் விஜய்குமார், கின்னஸ் சாதனையாளர் டிராகன்ஜெட்லீ, போட்டி அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

போட்டிகள் கட்டா. குமித்தே ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. பல்வேறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் 1000-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.