Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கருணாநிதியின் குடும்பக் கடனை அடைத்த எம்ஜிஆரை இழிவாக பேசிய ஆ. ராசாவுக்கு முன்னாள் எம்பி ரத்தினவேல் கண்டனம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை மாநகர செயலாளர். சீனிவாசன்

0

 

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ரத்தினவேல், சீனிவாசன் பேச்சு.

பட்டியல் இனமாணவி மீது வன்கொடுமைகளை ஏவி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சினிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசும்போது:

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,:

கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதிமுகவை ஆரம்பித்து 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர். திமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டு காலம் கோட்டை பக்கம் கருணாநிதியால் செல்ல முடியவில்லை. இன்றைக்கு அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆரை ஆ.ராசா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த ஆட்சியில் சொத்துவரி மின்கட்டணம் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான அதிமுக பெரும். பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த திமுக குடும்ப உறுப்பினர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.


ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,, மாணவரணி மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், பாலாஜி கலிலுல் ரகுமான், மீரான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன்,
அப்பாஸ்,
இலியாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், பூபதி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாத பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், பொதுக்குழு கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன்,அதிமுக வழக்கறிஞர் அணி வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, ஜெயராமன், கங்கை செல்வன், வரகனேரி சசிகுமார்,
சுரேஷ் மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ்,அப்பா குட்டி, சக்கரவர்த்தி. வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், உறையூர் பகுதி சந்திரசேகர், என்ஜினியர் ராஜா, ராஜாளி சேகர்,குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், எடத்தெரு பாபு, தென்னூர் ஷாஜகான், ராஜா, கே.பி. ராமநாதன், எடத்தெரு குமார்,
ஜெயக்குமார், கல்லுக்குழி முருகன், டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ , அக்பர் அலி, மற்றும் பொன் அகிலாண்டம், ஈஸ்வரன், காசிபாளையம் சுரேஷ்குமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம்,டைமன் தாமோதரன்,ஐ.டி. பிரிவு நாகராஜ், ராஜ்மோகன்,
செல்லப்பன், வண்ணாரப்பேட்டை ராஜன், டி ஆர் சுரேஷ் குமார், பீமநகர் சீனிவாசன், ஆரி, பொம்மாசி பாலமுத்து, ஜோசப் ஜெபா,சதீஷ் நாட்டாமை சண்முகம், சிங்கமுத்து, சிந்தை ராமச் சந்திரன்,வெஸ்லி,மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ்,ஆண்டாள் தெரு சந்தோஷ் ராஜ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் தினகரன்,முன்னாள் கவுன்சிலர் நத்தர்சா, வெல்லமண்டி கன்னியப்பன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் பூபதி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.