Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நவீன மாயமாக்கப்பட்ட தொழில் முறை எல் ஐ சி முகவர் கிளையை தென் மண்டல மேலாளர் திறந்து வைத்தார் .

0

 

திருச்சியில் நவீன மயமாக்கப்பட்ட தொழில்முறை முகவர் கிளை திறப்பு .

எல்ஐசி தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன் திறந்து வைத்தார்.

 

எல்ஐசியின் தொழில் முறை முகவர் கிளை (சி‌ஏ பி ) திறப்பு விழா திருச்சி ரயில் நிலையம் எதிரில் உள்ள
யூனிட் ஒன் எல்ஐசி அலுவலக வளாத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை தென்மண்டல முதன்மை பொறியாளர் முன்னிலை வகித்தார்.
மண்டல மேலாளர் வெங்கடரமணன் மற்றும் தஞ்சை கோட்ட மேலாளர் கே. கே. சுர்ஜித், வணிக மேலாளர் சூரஜ் குமார், விற்பனை மேலாளர் மற்றும் எல்ஐசி தலைமை பொறியாளர் ஆகியோருக்கு தஞ்சை கோட்ட முகவர் சங்கம் (LIAFI) சார்பில் கோட்டத் தலைவர் வி.செல்வ கணேசன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார், யூனிட் 1 கிளையை சார்ந்த மு. க. மணிவண்ணன், ஏஜி பழனி, டி.கோகுலகிருஷ்ணன், ஏ ஜி. வேணு, புவனேஸ்வரி ,
பல.சரவணன், சி ஏ பி கணேசன், ஆர்.ராமச் சந்திரபாபு, வேலுச்சாமி உள்ளிட்ட ஏராள முகவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தொழில் முறை முகவர் கிளை மேலாளர் எம்.செல்வராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.