வீரவணக்க நாள் அன்று நடைபெறும் அமைதி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அதிமுக அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வேண்டுகோள் .
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
25.1.2024 ம் தேதி வியாழக்கிழமை
காலை 10.00மணிக்கு திருச்சி மாவட்ட அஇஅதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோர்ட் எம்ஜிஆர் சிலையிலிருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் வரை அமைதி ஊர்வலமாக சென்று நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்படும்.
அன்று மாலை 6.00மணிக்கு
திருச்சி மாவட்ட மாவட்ட கழக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி சறுக்கு பாறையில் நடைபெற உள்ளது .
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் , மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ,
மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .