திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக கிடந்தாா. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.