Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தமுமுக மமகவினரிடம் ஆம்புலன்சை அர்ப்பணித்த முன்னாள் ராணுவ வீரர்

0

 

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் நேற்று மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா , மற்றும் துணை அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ உதவி, இரத்த தானம்,
ஆம்புலன்ஸ்கள் சேவை மற்றும் கொரோனா நோய் தொற்று காலங்களிலும் பணிகள் செய்ததை அறிந்து துறையூரில் வசிக்கும் தருண்குமார் அவர்களின் தகப்பனார் முன்னாள் ராணுவ வீரர் T.மகாலிங்கம் அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் ஆம்புலன்சை வழங்கினார்கள்.

அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துறையூர் சித்திரை பட்டி கிளையில் மமக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமத் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுவதற்காக ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக்,மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாருக் மஹாராஜா சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட துணை,அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.