எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள்: திருச்சி 14 வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி 15A வட்ட கழக செயலாளர் கே.பி.ராமநாதன் அவர்களின் ஏற்பாட்டில்
14வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி. அரவிந்தன் தலைமையில்
பாபு ரோட்டில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் :15A வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.