Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்.3 பேர் கைது .

0

 

திருச்சி விமான நிலையத்தில் அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வந்த ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து வந்த பாடிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

பின்னர் 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.