புதிய தொழில் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு.
புதிய தொழிற்பள்ளிகள், மற்றும் அங்கீகாரம்
புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு.
திருச்சி மாவட்டத்தில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்கவும். ஏற்கெனவே இயங்கும் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2024 – 2025ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணங்கள் ஆர்டிஜிஎஸ் அல்லது என்இஎப்டி மூலம் செலுத்த
வேண்டும்.
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.02.2024 ஆகும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தல், தொடர்புடைய தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு,
www.skilltraining.tn.gov.in
என்ற இணையதளத்தையும் தொலைபேசி எண் : 044 }22501006 (113), இ மெயில் :
::detischennai@gmail.com
ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.