திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப் பட்டது.
சாக்சீடு இயக்குனர் அருட்.சகோதரி பரிமளா அவர்களின் தலைமையிலும் , அமல ஆசிரம பங்குத் தந்தை ராயப்பன் அவர்களின் ஜெப வழிபாட்டுடனும் விழா துவங்கியது.
விழாவில் சாக்சீடு பணியாளர்கள் (ம) சமூக பணித்துறை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.