திருச்சி கே.கே.
நகர் கே சாத்தனூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வம்.
இவர் சென்னை பரங்கி மலையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் கே.கே. நகர் வீட்டை பூட்டிவிட்டு தில்லை நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கே.கே .நகர் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து அறை பவுன் நகை மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக கலைச்செல்வி கே.கே.நகர் போலீஸ் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.