Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு .

0

'- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு.

 

Ad banner

தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில்  இன்று மாநில தலைவர் வின்சென்ட் தாமஸ் தலைமையில். நடந்தது .
மாநில செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை ராணுவ படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

தமிழகத்தில் முன்னாள் துணை ராணுவ படை வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ராணுவத்திற்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.

கல்வி, மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிக்கைகள் பல வருடங்களாக நிறைவேற்றாமல் உள்ளது.ஆகவே தீர்மானங்களை நிறைவேற்றும் விதமாக கலந்தாய்வு கூட்டம் நடத்தி சென்னையில் மாநில மாநாடு நடத்துவது என முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் மாநில முழுவதும் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.