Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக மக்களை அயோதிக்கு தினமும் அழைத்துச் செல்ல ஏற்பாடு. திருச்சியில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கருப்பு முருகானந்தம் .

0

தமிழக மக்களை அயோத்திக்கு ஒரு மாதத்துக்கு தினமும் ரயில்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் கருப்பு முருகானந்தம்.அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு நே நேற்று வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு தமிழகத்திலிருந்து ஒரு மாதத்துக்கு தினமும் மாவட்ட வாரியாக பொதுமக்களை ரயில்களில் அயோத்திக்கு அழைத்து சென்று ராமா் கோயிலைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.