திருச்சியில் சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பாக
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூய அந்திரேயா சி எஸ் ஐ ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் A.முகமது சலாம்,
தலைமை மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர்
P.அருள்சுந்தரராஜன்
மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் S.இப்ராஹிம் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார் .

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி மற்றும் நலத்திட்ட உதவிகளை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில செயலாளர் டாக்டர்.
அ.சுபேர் கான்
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் வழங்கினார்கள்
டாக்டர் கலைஞரின் புகழ் அஞ்சலியை
புதுகை பூபாலனின் குழுவினரின் வழங்கினர்

நிகழ்வில் மாவட்ட மாநகர நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் கவிஞர் சல்மா செங்குட்டுவன் லீலாவேலு
நூர்கான் சந்திரமோகன் செல்லையா சரோஜினி
பகுதி கழகச் செயலாளர் மணிவேல், நீலமேகம், தர்மராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.