டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கரை பகுதி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பங்கேற்பு .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்கள்செல்வர், டிடிவி_தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கரை பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக கொடி ஏற்று விழா மற்றும் நிகழ்ச்சிகள்
பாலக்கரை பகுதி செயலாளர் உமாபதி ஏற்பாட்டில்,
திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில்
கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் மற்றும் .தருண், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆகியோர் முன்னிலையில்,
மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் கோயில்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது .
முன்னதாக பாலக்கரை பகுதி
வட்டக் கழக செயலாளர்கள், பா.துரைசாமி, ஜெகதீசன்,
கே என் பாலு, மகேஸ்வரன், பிரான்சிஸ் ராஜா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள்,
மாநில நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி, கிளை, வட்ட, செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.