திருச்சி: பள்ளியில் ஏற்பட்ட பணி சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி
கே.கே. நகர் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தனராஜ். இவரது மனைவி அமுதா சோபியா (வயது 49)இவர் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஐந்து மாத காலமாக பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பணி சுமை காரணமாக மன உளைச்சலில் காணப்பட்டார் இது தொடர்பாக சோபியா மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வருகிறது.
இந் நிலையில் சம்பவத்தன்று அமுதா சோபியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமுதா சோபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ஸ்டீபன் சந்தனராஜ் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியை அமுதா சோபியா இறந்ததற்கான காரணம் என்ன என்று குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.