திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் சாவு.
அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியானார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி
திருவளர்ச்சிப்பட்டி செம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பட் (வயது 14). இவர் திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இவரிடம் பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.
ஆனால் மாணவனோ கடந்த ஒன்றாம் தேதி பள்ளியில் இருக்கும் பொழுது பத்து மாத்திரையை சாப்பிட்டதாக
கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.உடனே பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார் இது தொடர்பாக உறையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை