திருச்சி ரஜினி ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து திமுகவில் இணைந்தனர் .
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50 நபர்கள் திருச்சி மாநகரக் கழக செயலாளர்
மு.மதிவாணன் முன்னிலையில், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இவர்களை சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .