Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி.

0

 

அரியமங்கலம் அருகே தண்டவளத்தை கடக்க முயன்ற நபர்
ரெயிலில் அடிபட்டு சாவு.

திருச்சி அரியமங்கலம் அருகே நேற்று மாலை ரெயில்வே தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்பொழுது திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற ரெயில் அவர் மீது எதிர்பாராதமாக மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதபமாக இறந்தார்.

இறந்த நபருக்கு
48 வயது இருக்கும். டார்க்புளூ சட்டை, கோடு போட்ட லுங்கி அணிந்து உள்ளார்.இறந்த நபர் உடனடியாக அடையாளம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் அடிப்பட்டு இறந்த நபரின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்மலை ரெயில்வே துணை ஆய்வாளர் லெட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரெயிலில் அடிபட்டு இறந்த நபரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொன்மலை ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.