அனைத்து உலக இந்து மக்களுக்கும் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தீபாவளி வாழ்த்து.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
அநீதியை ஒழித்து நீதியை நிலை நாட்ட நரகாசுரன் வீழ்த்தப்பட்ட இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து மக்களும் தீபாவளி பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
புத்தாடைகள், அணிந்து பட்டாசுகளை வெடித்து இந்து மக்கள் மத்தியில் ஆண்டுதோறும் கோலாகலமாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையில் ஆன்மீகம் தலைதோங்கவும், மத நல்லிணக்கம் வளரவும் இறைவன் அருள் புரிய வேண்டும்.
இந்து தர்மம், தலைதோங்கவும், அதர்மம் ஒளிந்திடவும் இந்நாளில் அனைவரும் சூளுரைக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து இந்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.