Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

0

 

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் திருச்சி சமயபுரம், பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் வளாகங்களில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

சுமார் 20 லட்சம் சதுரடியில் 7 மாணவர் விடுதிகள் சமயபுரம், பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன.

இந்த மாணவர் விடுதிகளானது நவீன சமையலறை, குளிரூட்டப்பட்ட அறைகள், உடற்பயிற்சி கூடம், ஏ.டி.எம், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம், 24 மணி நேர மருத்துவ வசதி உள்பட பல்வேறு வசதிகள் கொண்டது.

இந்த மாணவர் விடுதிகளில் சுமார் 10,000 மாணவர்கள் தங்கலாம்.
இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் குழும் செயலாளர் நீலராஜ், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன், பல்கலைக்கழக எப்.சி.நிர்மல் கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.சி.கே.ரஞ்சன், பதிவாளர், பல்கலைக்கழக புலமுதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.