Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மது கூடங்களை ஏலம் எடுக்க நாளை கடைசி நாள்.

0

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கூடங்களை ஏலம் எடுக்க வெள்ளிக்கிழமைக்குள் (அக். 27) விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் (பொ) மேலாளா்  விஜய் சண்முகம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 161 டாஸ்மாக் கடைகளில் 105 கடைகள் மதுக்கூடங்களுடன் இயங்கி வருகின்றன. இவற்றில் 51 மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு (மால் ஷாப் 5 தவிா்த்து ) இ -டெண்டா் மூலம் ஏலம் விடப்படுகிறது.

இதற்கு அக். 27 பிற்பகல் 2 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அன்று மாலை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.