Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செப்.30ம் தேதிக்குப் பின் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கை செல்லாது. மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி.

0

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30ம்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மகாராஷ்டிரா மாநிலம், பீகார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.