திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டிக்கவுண்டன் பட்டியசை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). கருப்பூர் பஞ்., மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் தி.மு.க., ஒன்றிய துணை செயலரான கணேசன் ஆகியோர், அப்பகுதியில் டிப்பர் லாரியில் மணல் கடத்தி உள்ளனர்.
புத்தாநத்தம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, மணல் லாரியை பிடித்து, பழனிவேலை கைது செய்தனர். டிப்பர் லாரி, மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
கணேசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.