பொன்மலை பணிமைனையில் இன்று ஆயுத பூஜை விழா.தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொன்மலை பணிமனையில் இன்று 21.10.23 ஆயுத பூஜை கொண்டாட்டப்பட்டது.
இன்று பொது மக்கள் பொன்மலை பணிமனை சுற்றி பார்த்தார்கள்.
பணிமனையில் உள்ள தொழிலாள்கள் தங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து, அலங்காரங்கள் செய்து வேலை செய்யும் ஆயுதங்கள் வைத்து, பொரி, பொட்டுக்கடலை, சுண்டல் ,இனிப்புகள் வைத்து வந்தவர்களுக்கு வாங்கினார்கள் . இதில் வட மாநில பெண்கள், குழந்தைகள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் வந்து பணிமனை சுற்றி பார்த்தார்கள்.
இதில் தண்ணீர் அமைப்பு சார்பில் டீசல் பிரிவில் ஒரு பகுதியில் துணிப்பை, மரக்கன்று, புத்தகங்கள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
இதில் டீசல் பிரிவு உதவி பணிமனை மேலாளர் துவாரகன், மேற்பார்வையாளர்கள் இந்திரகுமார், சேதுராமன், செந்தில்குமார், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், பெரியசாமி, மார்ட்டின் , உதயகுமார், காளியப்பன், செல்வராஜ், மணிகண்டன் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.