Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

 

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ்சும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருச்சியும் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு விழிப்பயணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பு.சு.விஜயலட்சுமி தலைமைதாங்கி தலைமையுரை ஆற்றினார், தமிழ்நாடு மாநகராட்சி பெண்கள் முன்னேற்ற நிதி ஆலோசகரான இராஜேந்திரன் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றியும் மாசு இல்லாத நாடே வளமான நாடு என்ற தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவ-மாணவியர்க்கு மஞ்சப்பை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் மாவட்டப் பொறியாளர் சிவரஞ்சனி, தேவகி,இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்மான முனைவர் இரா.குணசேகரன் வரவேற்புரையும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரான முனைவர் காசிமாரியப்பன் நன்றியுரையும் ஆற்றினர்.

விழாவில் முன்னூற்றிற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.