Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு இ.பி. எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் திருச்சி மண்டல கூட்டத்தில் தீர்மானம்.

0

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி மண்டல கூட்டம்
மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர்
சேக்கிழார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மின் வாரியத்தில் உள்ள 56,000ம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5387 கேங்க்மேன்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

கேங்க்மேன்கள் சொந்த மாவட்டத்திற்கு மாறுதல் உத்தரவு வழங்கி கள உதவியாளராக பதவி மாற்றம் செய்யவேண்டும்.

10 வருடத்திற்கு மேல் பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். முதற்கட்டமாக தின ஊதியத்தை வாரியமே நேரடியாக தின ஊதியம் ரூ587வழங்க வேண்டும்.

ஊதிய உயர்வு நிலுவைத்தொகை முதல் தவணையை உடனடியாக வழங்க வேண்டும்.

1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த 12,000 பேருக்கு 6 சதவிகித ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

மின் கம்பங்கள் அரசு கேபிள் வயர்களை கொண்டு செல்வதால் பராமரிப்பு மற்றும் பணிகளை செய்ய முடியாமல் விபத்து ஏற்படுவதை தடுத்து நிறுத்திட கேபிள் வயர்களை மின் கம்பத்தில் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திருச்சி சிவசெல்வன், புதுக்கோட்டை குமார், பெரம்பலூர் கனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் திருச்சி பெருநகர வட்ட தலைவர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.