திருச்சி ஆர்.கே. ராஜாவுக்கு சிறந்த சமூக சேவையாளர் மகுடம் விருது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சியின் வளர்ச்சிக்காக சிந்திக்கும் மாமனிதர்களுக்கான மகத்தான மகுடம் 2023 விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி உள்ளூர் டிவி, மொராய்ஸ் சிட்டி செப்கோ அரங்கில் நடத்தியது.
தனியார் உள்ளூர் டிவி நிர்வாக இயக்குனர் அருண்குமார் வரவேற்றார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆர்.கே.ராஜாவுக்கு மரங்கள் நடுதல் ஏரி குளங்களை தூருவாருதல், நெகிழிப் பைகளை தவிர்த்து துணி பைகளை உபயோகிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சமூகப் பணியை பாராட்டி,
சிறந்த சமூக சேவையாளர் மகுடம் விருதினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழும தலைவர் ராமமூர்த்தி, எம்.ஐ.டி கல்வி நிறுவனங்கள் துணைத் தலைவர் பிரவீன் குமார், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் மதிவாணன், பெமினா ஷாப்பிங் மால் நிர்வாக இயக்குனர் அபுபக்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.