Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஸ்கில் இந்தியன் மற்றும் ஆத்தூர் நாகா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான மருத்துவ கல்வி கருத்து அரங்கம்

0

திருச்சியில் மாநில அளவிலான மருத்துவக் கல்வி கருத்தரங்கம்.

ஸ்கில் இந்தியன் மற்றும் ஆத்தூர் நாகா பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான மருத்துவ கருத்தரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிச்சைமணி, ஆத்தூர் தரணி பாய் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். தலைவர் மோகன் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் டாக்டர் ஹென்னா மற்றும் ஹேமலதா ஆகியோர் மாதவிடாய் கோளாறு, அறுவை சிகிச்சை ஆகியவை தொடர்பான விளக்கங்களை காணொளி மூலம் வழங்கினர்.

மருத்துவ ஆய்வகத்தின் நவீனத்துவம் குறித்து லோகநாதன் மார்ட்டின் தேவதாஸ் பேசினார்.

வனம் சார்ந்த விழிப்புணர்வு குறித்து டாக்டர் டேவிட் ராஜ் பேசினார். ஸ்கில் இந்தியன் வழங்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய கருத்துரையை நாகா வழங்கினார் .ஊட்டச்சத்து நவீன வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு பற்றி ஸ்கில் இந்தியன் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.