ஸ்டேட் பேங்க் (லேட்) எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கியது.
திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட இளையோரு க்கான தடகள போட்டி – 2023
இன்று 26.08.23 காலை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் – 2023 , ஸ்டேட் பேங்க் (லேட்) எஸ் -மோகன் நினைவு சுழற்கோப்பை _2023, நியூரோ-ஒன், பனானா லீப் மற்றும் அற்புதபவன் இணைந்து வழங்குகிறார்கள்.
மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், ஆர்.சுதமதி ரவிசங்கர், துணை செயலாளர் எம்.கனகராஜ் , மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளார் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடந்தது.
போட்டியை
ஆனந்தன்
Commandant of Police, TSP 1BN, Trichy, & Vice President / TDAA
ஹரிகுமார்
IRTS, Sr. Divl, Optg. Manager, S.Rly./Trichy
ஒலிம்பியன் பெ.சுப்ரமணியன்
முதுநிலை துணைதலைவர். திருச்சி மாவட்ட தடகள சங்கம்
ஆண்டனி ஜோயல் பிரபு மாவட்ட விளையாட்டு மற்றும்
இளைஞர் நலன் அலுவலர், திருச்சி மாவட்டம்.
கிரிஷ் பிதோவன் தலைவர், ஸ்டேட் பேங்க் S.மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமம்
மனோகரன் பனானா லீஃப் அற்புத பவன் & ஸ்ரீ அற்புதா Sweets & Snacks
|
விஜயகுமார் மேலாண்மை இயக்குநர். நியூரோ ஒன் மருத்துவமனை, திருச்சி
ஸ்வர்கதிவ்யதர்ஷினி Executive Manager Casagrand Vice President/TDAA
ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.
மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 110 மீ, 110 மீ, 1500 மீ, 800 மீ, 600 மீ, போன்ற போட்டிகள் இன்று நடந்தது.
இதில் வெற்றி பெற்ற முதல் முன்று வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியிற்கு டி.ஆர்.சுரேஷ், சங்கர், எம்.ரமேஷ், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன் , ரெங்கச்சாரி, நடராஜன், கணேஷ், ரவிந்திரன், ஆனந்தன் , ராமச்சந்திரன், மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துக் கொண்டார்கள் .
நாளை 27.08.23 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்குப்படும்.