77வது குடியரசு தினத்தில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.50 லட்சம் பரிசாக மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாநகராட்சி ஆணையர் உடன் இருந்தார்.
இந்த விருது பெற்ற படம் திருச்சி மாநகராட்சி வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்தியை நுழைய விட மாட்டோம் தமிழகத்தில் தமிழ் மட்டுமே எனக் கூறிவரும் தமிழக முதல்வர் வழங்கிய விருதில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் திருச்சி மாநகராட்சி வாயிலில் தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக செயல்படுவதாக கூறி சுதந்திர தினத்தில் விருது வழங்கப்பட்ட படம் வைக்கப்பட்டுள்ளது.
இதன் பட விளக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழக முதல்வர் வழங்கிய கேடயத்தில் Best performing Corpartion என ஆங்கிலத்தில் தான் உள்ளது.ஆக தமிழ் வாழ்க தமிழ் வளர்க என திமுக அரசு கூறுவது வெறும் வாய் வார்த்தை மட்டும் தானா? இந்த படத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகள் திருச்சி மேயர் அன்பழகனுக்கு படிக்கத் தெரியுமா? திருச்சி மாநகரில் எந்த வசதியும் செயல்படுத்தாத நிலையில் திருச்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? திருச்சியே சிறந்த மாநகராட்சி என்றால் மற்ற மாநகராட்சியின் நிலை எப்படி இருக்கும்? ஏன் மாநகராட்சிக்கு தங்கள் சொந்த பணியாக வந்த பொதுமக்கள் கேள்வி எழுப்பி நகைத்து சென்றனர்.