திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஒரு நாள் முதலுதவி குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆலோசனைப் படியும், திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி மற்றும் முதலுதவி குறித்த ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.
பயிலரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் பு.சு.விஜயலட்சுமி தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேரா.க. வெற்றிவேல் திருச்சி மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் ஜி.இராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு யூத் ரெட் கிராஸ் அறிமுகமும் பணிகளும் பற்றி சிறப்புரை ஆற்றினர்.
திருச்சி காவேரி மருத்துவமனை மாதவன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அவரசர கால முதலுதவி குறித்து யூத் ரெட் கிராஸ் மாணவ-மாணவியர்க்கு பயிற்று வித்தனர்.
திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியருமான பேரா.இரா.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த பயிலரங்கில் 400 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.