திருச்சியில் கடன் தொல்லையால்
கார் புரோக்கர் தற்கொலை.
திருச்சி செந்தண்ணீர்புரம் முத்து மணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (வயது 43). இவர் கார் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் சிலரிடம் பணம் கடனாக பெற்று உள்ளார்.
அதனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்த மன உளைச்சலில் கபிலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி சத்யா பொன்மலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.