திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூஷன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் ஐந்து நாள் பயிலரங்கம்.
திருச்சி என்ஐடி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவுத் திறனின் எதிா்கால பயன்பாடுகள் குறித்த 5 நாள் பயிலரங்கம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) தொடங்கியது.
அமெரிக்காவின் புா்டியூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ராஜு சுந்தர்ராஜன், டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் பாலா ஸ்ரீ ராகவன் ஆகியோா் பயிலரங்கை தொடக்கி வைத்தனா்.
நிகழ்வுக்கு என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா்.
பயிலரங்கில் மருத்துவ உபகரண கருவிகள், செயற்கை நுண்ணறிவுத் திறன் குறித்தும் எதிா்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்னைகளுக்கான தீா்வுகள், புதிய நுணுக்கங்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிகளின் வாழ்நாள்களை நீட்டிக்கும் விதமாக நோயாளிகளின் தரவு, மருத்துவம் குறித்து மற்றும் ஆலோசனைகளை மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
நிகழ்வில் பேராசிரியா்கள் சிவகுமரன், ஸ்ரீ மூா்த்தி, பிருந்தா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனா்.