தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் கே.சி.நீலமேகம், ஆர்.கே.ராஜா ஆகியோருக்கு சேவை செம்மல் விருது வழங்கிய திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்.
சமூக சேவையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் திருச்சி ஓயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் 26 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விருது வழங்கும் முப்பெரும் விழாவில், திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் துணிப்பை உபயோகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து விதமாக, துணிப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
”பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்” என்ற விழிப்புணர்வு அனைத்து நிகழ்விலும் , வழியுறுத்துவதை நோக்கம்
நிகழ்வில் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பால் குணா லோகநாத் பத்மஸ்ரீ சுப்புராமன், ஒயிட் ரோஸ் சங்கர், தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, மோகன், அய்யாரப்பன், காமகோடி சுந்தர், மற்றும் யோகா விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கே.சி.நீலமேகம்,ஆர்.கே.ராஜா உள்ளிட்டோக்கும் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது