காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் மற்றும் சர்வதேச கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி.
சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினமான நேற்று (26.06.2023) காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியை
பள்ளி மேலாண்மைக் குழு தலைவரும், காருகுடி ஏழாவது வார்டு கவுன்சிலருமான
விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
இந்த விழிப்புணர்வுப் பேரணி காருகுடியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான தொடர் முழக்கங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணியில் மாணவர்கள்,
ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஊர்ப் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஊர்ப் பொதுமக்களும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் வெகுவாகப் பாராட்டினர்.