பணம் இரட்டிப்பு மோசடி புகாரில்
திருச்சி நிதிநிறுவன அதிபர் கைது.
திருச்சி கண்டோன்மென்ட் தலைமை அஞ்சலகம் அருகே நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் ச. ரஞ்சித்குமார் (வயது 48) என்பவர், கருமண்டபம் ஜெய நகரைச் சேர்ந்த ஜே.டேனியல் லெனில்குமார் (வயது 23) என்பவரிடம், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய டேனியல் ரூ. 26.50 லட்சத்த கடந்த 11.06.2020 முதல் 19.08.2021 வர முதலீடு செய்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்டபடி பணத்த இரட்டிப்பு செய்தும் தரவில்லை. கொடுத்த பணத்தயும் திருப்பித் தரவில்லை.
இது குறித்து டேனியல் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
இதுபோல திருச்சியில் மேலும் பலரிடம் அவர் பணம் பெற்றிருப்பதாகவும் புகார்கள் பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.