கண்டன ஆர்ப்பாட்டம்.
அயல்நாடுகளில் பயிலும் சிறுபான்மை மாணவர்களின் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றை நிறுத்தியதை கண்டித்தும்,
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும்,
பா.ஜ.க. அரசால் சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், மெளலானா ஆசாத் தேசிய கல்வி ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு
திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அரச மரத்தடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட தலைவர் வின்சென்ட். சமூக செயல்பாட்டாளர் ஸ்ரீதர், மாவட்ட குழு உறுப்பினர் அன்வர் உசேன் ஆகியோர் பேசினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் அப்துல்கயூம், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஷேக் நன்றி கூறினார்.