திருச்சி:சென்னை சில்க்ஸ் உணவு கூடத்திற்கு சீல்.மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் பாராட்டு.
திருச்சி ஐஸ்கிரீம் கடைக்கு, தி சென்னை சில்க்ஸ் உணவு கூடம் சீல் வைத்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் பாராட்டு.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று [18.06.2023]ந் தேதி திருச்சி மாநகரில் நடத்தப்பட்ட பல சோதனைகளில் திருச்சியில் 30 ஆண்டு பாரம்பரியம் மிக்க (?) மைகீல்ஸ் ஐஸ்கிரீம் கடை சுகாதார கேடான முறையில் இயங்கியதால் கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டதுமின்றி, சீல் வைக்கப்பட்ட செய்தி திருச்சியில் ரெக்கை கட்டி பறக்கிறது.
ஆனால் தமிழகம் முழுவதும் ஜவுளி மற்றும் தங்க நகை தொழிலில் கோலாச்சும் *தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்* திருச்சியில் இயங்கி வருகிறது. இந்த தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் தரை தளத்தில் தங்க நகை பிரிவும், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஜவுளி பிரிவும், மூன்றாவது தளத்தில் மேற்படி நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயன்படுத்தும் உணவு தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது.
மேற்படி தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இந்த உணவு தயாரிப்பு கூடம் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட காரணத்தினால் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையால் நேற்று (18.06.2023)ந் தேதி அபாரதம் விதிக்கப்பட்டதோடு, மேற்படி தி சென்னை சில்க்ஸ் உணவு கூடத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ஆனால் தி சென்னை சில்க்ஸ் திருச்சி நிறுவனத்தின் உணவு தயாரிப்பு கூடம் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சீல்வைக்கப்பட்டது சில முக்கிய ஊடகத்திலோ, பத்திரிக்கைகளிலோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் தொடர்ந்து தைரியமாக திருச்சி மக்களின் உணவு பாதுகாப்பில் துரித நடவடிக்கை எடுக்கும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மெச்சதகுந்த தொடர் பணியினை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம் என கூறியுள்ளார்.