திருச்சி சத்திரம் பஸ்நிலைய
கடை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் கடை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்
நடந்தது. அப்போது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மாநகராட்சி கடைகளில் நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவர் எஸ்.பி.பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேரவையின் மாவட்ட துணைத் தலைவர் பஜார் மைதீன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சுலைமான் மற்றும் பகுருதீன்,திருச்சி கோபால் ஆகியோர் சென்று அவர்களிடம் ஆலோசனை செய்தனர்.
இந்நிகழ்வில் தலைவர் எஸ்.எம்.சேட்டு, செயலாளர் ராயல் சேட்டு மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.