Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்.

0

 

திருச்சியில்
கல்லூரி மாணவி மாயம்.

திருச்சி பீமநகர் கோல்டன் ஜூபிலி நகரை சேர்ந்தவர் முரளி.இவரது மகள் யோகிதா (வயது 19) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று யோகிதாவை அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்று இறக்கி விட்டுள்ளார்.பின் மாலை வந்து கல்லூரியில் அவரை அழைத்து செல்ல சென்ற பொழுது யோகிதாவை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை முரளி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து யோகிதாவை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.