திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மீது கார் மோதி சாவு .
திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி ரூபி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று கல்லூரியில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல திருச்சி மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ரூபி மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த ரூபி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.