திருச்சியில் ஓபிஎஸ் மாநாட்டில் இது அணி அல்ல மக்களின் படை என்பதை நிரூபிப்போம். ஓபிஎஸ் அணியினர் பேட்டி.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் ஆணைப்படி திருச்சி மாநகர் ஜி கார்னர் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து இன்று முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன்,முசிறி ரத்தினவேல், சாமிக்கண்ணு, ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து கூறிய போது:-
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்சியின் ஐம்பதாவது ஆண்டு தொடக்க நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடத்தப்பட உள்ளது.
இது தமிழக மக்களுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் திரள இருக்கின்றோம். காலை முதல் தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருவார்கள் மூன்று இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்கி 9 மணி வரை நடைபெறும்.
ஏற்கனவே இந்த மாநாட்டுக்கு சசிகலா. தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பத்திரிகை வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இணையவும், கலந்து கொள்ளவும் முடியும்.
எங்களுக்கு போட்டியாக மதுரையில் நடைபெற இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மாநாடு நடக்குமா என்பது எங்களுக்கு தெரியாது. இந்த மாநாட்டுக்கான கால்கோல் விழா நாளை அதிகாலை 5 30 மணியளவில் நடைபெறுகிறது.
தனி மரம் தோப்பாகாது என்பதை இந்த மாநாட்டின் வாயிலாக நிரூபித்து காட்டுவோம்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் அறிவித்திருப்பதற்கு உரிய பதில் நடவடிக்கையை ஓ. பன்னீர்செல்வம் எடுப்பார்.
இந்த மாநாட்டை நாங்கள் அறிவித்த போது ஓபிஎஸ் அணி என்று கூறினார்கள். இது அணி அல்ல மக்களின் படை என்பதை நிரூபித்து காட்டுவோம். ஆளுநர் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு சர்வ சுதந்திரம் உள்ளது.
எங்களுக்கு போட்டியாக மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டை நடத்துவார்களா அல்லது ஓடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த மாநாட்டுக்கு பின்னர் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைவார்கள் ஒரு சிலர் மட்டும் விலகி நிற்பார்கள்.
ஜெயலலிதா காலத்தில் மோடியா அல்லது இந்த லேடியா என அவர் கேள்வி எழுப்பினார். அதே பாணியில் எங்களுடைய அரசியல் பயணம் இருக்கும்.