திருச்சி காஜா நகரில்
உள் அரங்க வடிவமைப்பாளர் அலுவலகத்தில் நகை, பொருட்கள் திருட்டு.
திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கோபால் ( வயது 39).
இவர் காஜா நகரில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் அலுவலகம் அமைத்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் பின்னர் காலையில் வந்து பார்த்தபோது கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ரூபாய் 15,000 ரொக்க பணம் மற்றும் இருண்டு விலை உயர்ந்த மடிக்கணினிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ராஜேந்திர கோபால் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.