திருச்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தலையில் மண்பானை ஏந்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் நீர்வழிச் சாலையை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தலையில் பானையை சுமந்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
மழை நீரை வீணாக கடலில் கலக்காமல் இருக்க மதுரை ஏசி காமராஜ் திட்டமான நீர் வழி சாலை அமைக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியமும் உத்தரவிட்ட பிறகு கூட கர்நாடகா மாநிலம் மாதா மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் வெள்ளை நீரை மட்டும் திறந்து விட்டு தமிழக விவசாயிகளை ஏமாற்றுவதை தடுக்க கோதாவரி, காவிரி, வைகை, குண்டாறு, அய்யாறு ஆகிய ஆறுகளை இணைத்து நீர்வழிச் சாலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி
உலக தண்ணீர் தினமான இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் ஐயாகண்ணு தலைமையில் உடலில் நாமம் போட்டு, பானையை தலையில் சுமந்தபடி
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.