திருச்சி அரசு பள்ளி ஆசிரியைக்கு அபராதத்துடன் சிறை தண்டனை.
திருச்சி பாலக்கரையை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லால்குடி, வாளாடியை சார்ந்த சேகர் என்பவரது மனைவி சித்ரா என்பவர் ரூபாய் 3-இலட்சத்து ஐம்பதாயிரம் கடனாக வாங்கியிருந்தார். மேற்படி சித்ரா திருச்சி லால்குடி மருதூர் பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் கோவிந்தராஜிடம் வாங்கிய கடன் தொகைக்காக சித்ரா கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியுள்ளது.
இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் -3 திருச்சி நீதிமன்றத்தில் சித்ராவிற்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். மேற்படி வழக்கை விசாரித்து இன்று (16.03.2023) தீர்ப்பளித்த நீதிமன்றம்,
எதிரி சித்ராவிற்கு ஒரு மாத சிறைதண்டனை மற்றும் காசோலை தொகையை அபராதத்துடன் மனுதாரருக்கு வழங்க எதிரி சித்ராவுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளிக்கட்டது.