Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தேசிய அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் முன்னணி மாநில மாநாடு நடைபெற்றது.

0

 

திருச்சியில்
தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் முன்னணி மாநில மாநாடு.

திருச்சியில் தேசிய அஞ்சல்,
ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் முன்னணி அமைப்பு சார்பில் தமிழ் மாநில மாநாடு மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் திருச்சியில் நடந்தது.

வரவேற்பு குழு தலைவர் ராஜேந்திரன் வரவேற்பு உரையாற்றினார். பொருள் ஆய்வு குழு அறிமுக உரையை தலைமை ஆலோசகர் ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் விரிவாக பேசினர். இதனை தொடர்ந்து புதிய மாநில தலைவர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன்,
விஷ்ணு தேவன், கிருஷ்ணன், தன்ராஜ், சசிகுமார், பரந்தாமன்,ரமேஷ், சுரேஷ்பாபு, முகமது அப்பாஸ், எழில், மாரியப்பன்,
ராஜேந்திரன், ராமமூர்த்தி, வீரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் அரசியல் சார்பின்றி ஓய்வூதியர்கள் நலன் கேட்கும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில புதிய நிதி செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.