திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில்
9-ம் வகுப்பு மாணவி உட்பட 4 பேர் மாயம்.
1)
திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி (வயது 14). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2)
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜான் அகஸ்டின் (வயது 53). மனைவியை பிரிந்து வாழும் இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஜான் அகஸ்டினை தேடி வருகின்றனர்.
3)
இதேபோல் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த வரதராஜன் மனைவி நெசிந்தா (வயது 72) என்பவர் நடைபயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4)
திருச்சி அரியமங்கலம் குவளக்குடி கத்திரி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஆரோக்கியராஜ் (வயது 50 ).திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் அகஸ்டின் ஆரோக்கியராஜ் ஏர்போர்ட் பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.